சித்தர் தினம் அனுஸ்டிப்பு

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் கடந்த 09/01/2023 அன்று சித்தர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

சித்த மருத்துவத்தின் தந்தையாக கருதப்பபடும் அகஸ்தியர் பிறந்ததினமான ஆயிலிய நட்சத்திரத்தன்று சித்தர் தினமாக கொண்டாடப்பட்டுவருகின்றது.

அதன் அடிப்படையில் இவ்வருடம் மாவட்ட சித்த வைத்தியசாலை – யாழ்ப்பாணம், மாவட்ட சித்த வைத்தியசாலை – முல்லைத்தீவு, மருந்து உற்பத்திப்பிரிவு – அச்சுவேலி மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலையும் அரச மூலிகைத் தோட்டமும் – கல்மடுநகர் ஆகிய நிறுவனங்களில் சித்தர் தினமானது பக்திபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்மாவட்ட சித்த வைத்தியசாலையில் அகஸ்திய முனிவருடைய சிலை புதிதாக நிறுவப்பட்டு அதற்குரிய சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், மாவட்ட சித்த வைத்தியசாலை – யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவின் மருத்துவ அத்தியட்சகர்கள், மருந்து உற்பத்திப் பிரிவு – அச்சுவேலி, கிராமிய சித்த வைத்தியசாலையும் மாகாண மூலிகைத்தோட்டத்தின் மருத்துவப் பொறுப்பதிகாரி, மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.