கல்மடுநகர் மூலிகை கிராமம் மற்றும் சித்த மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார்

கௌரவ மீன்பிடித்துறை அமைச்சர் ஆர். சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜே. ரஜீவன் மற்றும் கண்டவளை பிரதேச செயலாளர் திரு. பிருந்தகரன் ஆகியோர் கல்மடுநகர் கிராமிய சித்த வைத்தியசாலை மற்றும் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு 03 ஜூலை 2025 அன்று விஜயம் மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின போது வைத்தியசாலையின் செயற்பாடுகள், வழங்கப்படும் சேவைகள், மாகாண மூலிகை கிராமத்தின் வருமானம் பெறும் முறைமைகள் மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்கள் ஆகியவை பற்றி கேட்டறிந்ததுடன் மூலிகைச் சிகிச்சை சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்கள் தொடர்பான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினர்.

இவ்விஜயத்தின் போது கௌரவ அமைச்சர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன. இதன் போது கல்மடு நகர் கிராமிய வைத்தியசாலையை மையப்படுத்தி மருந்தில்லா மருத்துவத்திற்கான மத்திய நிலையம் (Non Pharmacological Intervention Centre) ஒன்றை உருவாக்குவது தொடர்பான திட்ட முன்மொழிவொன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டது.