இலவச சித்த மருத்துவ முகாம்

“எல்லோர்க்கும் சித்த மருத்துவம்” என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் ,ந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 16.03.2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது.இந்நிகழ்வில் யாழ் ,ந்தியத் துணைத்தூதரக உயர் அதிகாரி, வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் நிர்வாகஉத்தியோகத்தர், சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபர், மருத்துவ உத்தியோகத்தர்கள், சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட ஆதார சித்த வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், சாந்தபுரம் கிராம பொதுஅமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இம்மருத்துவ முகாம் மூலம் 274 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.