2025 ம் ஆண்டுக்கான PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களிற்கு ஒழுங்கு செய்யப்பட்ட இயலளவைக் கட்டியெழுப்பும் பயிற்நெறிகளின் முதலாவது பயிற்சி நெறி வடமாகாண முகாமைத்துவ பயிற்சி அலகினால் 03 யூலை 2025 அன்று கனகபுரத்தில் அமைந்துள்ள முகாமைத்துவபயிற்சி அலகின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் Work Family Balance எனும் விடயம் பற்றி வைத்திய கலாநிதி சிவசுதன் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இதில் 20 வைத்தியர்கள் இணைந்து பயன்பெற்றனர்.