கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள குமரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் MIMB-07 இன முன்மாதிரித்துண்ட பாசிப்பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 08.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் மு.வேலாயுதபிள்ளை என்பவரின் களத்தில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.ஆ.அனோயா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் வயல் விழா நிகழ்வில் MIMB -07 இன முன்மாதிரித்துண்ட பாசிப்பயறுச் செய்கையினை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.s.விஜயதாசன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இவ்வாறான புதிய இன பயிரினங்களினை ஏனைய விவசாயிகளும் பயிரிட்டு உற்பத்தியினை அதிகரிப்பதோடு தங்களது வாழ்வாதரத்தினையும் உயர்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் விவசாயிகள், சமூக நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.