வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

Mobile Casino Games Released In 2021 Worth Trying - GamblingSites.com
வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் மக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களினால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் அவர்களிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள்  நேற்று (04) வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இவ்வாறாக மயிலிட்டித்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 3 ஏக்கர் 120 பேர்ச்சஸ் , பலாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் 1 ஏக்கர் 120 பேர்ச்சஸ், மயிலிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவு 13 ஏக்கர் 155.2 பேர்ச்சஸ் தனியார் காணிகள் உள்ளிட்ட 40 பேர்ச்சஸ் அரச காணிகளும் மயிலிட்டித்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில்  விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சி.சிவசிறி அவர்களும் கலந்துகொண்டார்.